sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

/

15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு ஊரை காலி செய்யும் கிராம மக்கள்


ADDED : மார் 28, 2025 06:31 AM

Google News

ADDED : மார் 28, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அருகே விஜயன்குடி கிராமத்தில்ரோடு மிகவும் சேதமடைந்து நடந்து செல்வதற்கு கூட பயனற்ற நிலையில் இருப்பதால் கிராம மக்கள் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இளையான்குடி அருகே உள்ள விஜயன்குடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மருதங்கநல்லுார் வழியாக சிவகங்கை செல்லும் ரோடு 15 வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் ரோடு முழுவதும் கரடு,முரடாக கற்கள் சிதறி காணப்படுகிறது.

அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும்ஆட்டோ கூட வர மறுப்பதால் உடல்நலம் சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விஜயன்குடி கிராமத்தில் ரேஷன் கடை, பள்ளிக்கூடம், நுாலகம் ஆகியவற்றிற்கு மாங்குடி, நல்கிராமம், மணக்குடி, பிடாரனேந்தல் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வரும் மக்கள் இந்த ரோட்டில் வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

கிராம மக்கள் கூறியதாவது: விஜயன்குடி ரோட்டை சீரமைக்க வேண்டுமென்று நீண்ட வருடங்களாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே மாவட்ட நிர்வாகம் விஜயன்குடி கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் ஊரை காலி செய்து வேறு இடத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றனர்.






      Dinamalar
      Follow us