sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்

/

சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்

சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்

சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்


ADDED : செப் 16, 2025 04:18 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை கீழவாணியங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் 27. இவர் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் தனியார் ஏஜன்சியில் பணியாளராக உள்ளார்.

இவர் செப். 14ம் தேதி இரவு நன்பர்களுடன் ரோஸ்நகரில் மது அருந்தியுள்ளார். பின்பு நண்பருடன் டூவீலரில் ராகினிப்பட்டியில் மது வாங்கிவிட்டு டூவீலரில் செல்லும் போது பின்னால் வந்த சிலர் விக்னேஷ் குமாரை கீழே தள்ளி தலையில் வெட்டினர்.

பின்பு அவர்கள் வந்த காரில் விக்னேஷ்வரனை ஏற்றி காருக்குள் வைத்து தாக்கி விட்டு ஈசனுார் அருகே விக்னேஷ்குமாரை இறக்கி விட்டுள்ளனர்.

விக்னேஷ்குமார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us