sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

தி.மு.க., நகராட்சி தலைவி பதவி பறிப்பு

/

தி.மு.க., நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தி.மு.க., நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தி.மு.க., நகராட்சி தலைவி பதவி பறிப்பு


ADDED : ஜூலை 02, 2025 10:19 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:சங்கரன்கோவில் நகராட்சி தலைவியான தி.மு.க.,வை சேர்ந்த உமா மகேஸ்வரி மீது அதே கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பதவியை பறித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., 8, அ.தி.மு.க., 12, ம.தி.மு.க., 2, காங். 1, எஸ்.டி.பி.ஐ., 1, சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர். கடந்த முறை தி.மு.க., அ.தி.மு.க., இரு வேட்பாளர்களும் தலா 15 ஓட்டுகள் பெற்றதால், உமா மகேஸ்வரி குலுக்கல் முறையில் நகராட்சி தலைவியாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் உமா மகேஸ்வரி, முறையாக கூட்டங்கள் நடத்தவில்லை. திட்டங்களை செயல்படுத்தவில்லை என தி.மு.க., கவுன்சிலர்களே குறை கூறினர். ஏற்கனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இரண்டாவது முறையாக கடந்த ஜூன் 2ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

நேற்று நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

உமாமகேஸ்வரி பங்கேற்கவில்லை. 29 கவுன்சிலர்களில் 28 பேர் அவருக்கு எதிராக ஓட்டளித்தனர். இதனால் அவரது பதவி பறி போனது. தி.மு.க., கவுன்சிலர் விஜயகுமார் மட்டும் அவருக்கு ஆதரவாக ஓட்டளித்தார்.






      Dinamalar
      Follow us