/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகளால் 136 தென்னை மரங்கள் சேதம்
/
காட்டு யானைகளால் 136 தென்னை மரங்கள் சேதம்
ADDED : ஜூலை 24, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கடமலைக்குண்டுவில் காட்டு யானைகள் 136 தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
குமணன்தொழு ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் பின்புறம் ஏழுசுணை பகுதியில் நேற்று அதிகாலை கூட்டமாக யானைகள் வந்தன.
இங்கு மேலப்பட்டி ராமராஜின் 67, என்பவரின் ஆறு ஏக்கர் பட்டா நிலத்தில் 2 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட 130 தென்னை மரங்களையும், அதேப்பகுதியில் குருபாரதியின் தோட்டத்தில் 6 தென்னை மரங்கள் என 136 மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின. இது குறித்து கண்டமனுார் வனத்துறையினர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்குளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.