ADDED : ஜூன் 30, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி வெங்கடாசலபுரம் ராமமூர்த்தி 70. வீடு, நிலம் வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார்.
அதே ஊரைச்சேர்ந்த ரவி, அவரது உறவினர் சேதுராமன் என்பவருக்கும் பூர்வீக வீட்டினை விற்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் ராமமூர்த்தி, இவரது மனைவி பத்மாவதி ஆகியோர் ஜங்கால்பட்டி செல்லும் ரோட்டில் சேதுராமனிடம் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த ரவி வீடு விற்பனை செய்ய தடையாக இருக்கிறார் என கூறி ராமமூர்த்தி, பத்மாவதியை தாக்கினார். ராமமூர்த்தி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.