/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
/
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
ADDED : ஜூலை 29, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரண்மனைப்புதுார் காளியம்மன் கோயில் தெரு பாண்டியராஜா 31. மில் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை 28. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு மனைவி மணிமேகலை, அவரது அக்கா பாண்டீஸ்வரியுடன் வீட்டருகில் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த கணவர் பாண்டியராஜா மனைவியை திட்டி, கத்தியால் வலது கையில் குத்தினார்.
இருவரையும் மணிமேகலை தம்பி செல்வகுமார் விலக்கி விட்டார். காயமடைந்தவரை மணிமேகலை சிகிச்சைக்காக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். பழனிசெட்டிபட்டி போலீசார் பாண்டியராஜை கைது செய்தனர்.