/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரப்புகளை வளப்படுத்த ஆடாதொடை, நொச்சி
/
வரப்புகளை வளப்படுத்த ஆடாதொடை, நொச்சி
ADDED : ஜூன் 14, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மண் வளத்தை மேம்படுத்த மாநில அரசு சார்பில் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள வயல்வெளிகளில் வரப்புகளை வளப்படுத்த ஆடாதொடை, நொச்சி வளர்க்க விவசாயிகளை வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது.
மாவட்டத்தில் தலா 1.10 லட்சம் நொச்சி, ஆடாதொடை கன்றுகள் விவசாயிகளுக்கு ஆகஸ்ட், செப்., மாதத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்காக உத்தமபாளையத்தில் உள்ள தலா 45 ஆயிரம் கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகிறது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.