sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரியில் பயிலரங்கம்

/

கல்லுாரியில் பயிலரங்கம்

கல்லுாரியில் பயிலரங்கம்

கல்லுாரியில் பயிலரங்கம்


ADDED : ஜூலை 29, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில், 'மூலக்கூறு பொருந்தச் செய்தல், உயிரியலுக்குரிய மென்பொருள் தொகுப்பு' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் சியாமளா கவுரி வரவேற்றார்.

கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினர். ஹோலிகிராஸ் கல்லுாரி உதவி பேராசிரியர் பொன்நிவேதா, 'மூலக்கூறு பொருந்துதல், உயிரியல் மென்பொருள் தொகுப்பு' குறித்து எடுத்துரைத்து, இத்துறையின் உயர்கல்விகள், வேலை வாய்ப்பு தகவல்களையும் மாணவிகளிடம் கூறி, அதுதொடர்பான மின்னஞ்சல் தகவல்களை விளக்கிக் கூறினார். பின் மாணவிகளின் சந்தேகங்களுக்கு நேரிடையாக விடையளித்தார். துறை பேராசிரியர் மலர்விழி நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us