sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீரபாண்டி கோயில் முதல் மரியாதை பிரச்னையில் உதவி ஆணையர், செயல் அலுவலர் மீது வழக்கு

/

வீரபாண்டி கோயில் முதல் மரியாதை பிரச்னையில் உதவி ஆணையர், செயல் அலுவலர் மீது வழக்கு

வீரபாண்டி கோயில் முதல் மரியாதை பிரச்னையில் உதவி ஆணையர், செயல் அலுவலர் மீது வழக்கு

வீரபாண்டி கோயில் முதல் மரியாதை பிரச்னையில் உதவி ஆணையர், செயல் அலுவலர் மீது வழக்கு


ADDED : மே 21, 2025 03:17 AM

Google News

ADDED : மே 21, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் பேரூராட்சி தலைவருக்கான முதல் மரியாதையை வழக்கத்திற்கு மாறாக செய்து ஜாதிய வெறுப்புடன் பேசியதாக அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நாராயணி உட்பட ஐந்து பேர் மீது எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இக்கோயில் சித்திரைத்திருவிழாவில் தேரோட்டம் மே 9 நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, கோயில் செயல் அலுவலர் நாராயணி, கணக்கர்கள் பாலசுப்பிரமணி, பழனியப்பன், மேலகாரர் வீரமணி ஆகியோர் வீரபாண்டி தி.மு.க., பேரூராட்சித்தலைவர் கீதாவுக்கு வழங்க வேண்டிய முதல் மரியாதையை கொடுக்காமல், வழக்கத்திற்கு மாறாக மரியாதை செய்ததாகவும், தட்டிக்கேட்ட பேரூராட்சித்தலைவர் கீதாவை ஜாதிய வெறுப்புடன் பேசி இழிவுப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து எஸ்.பி. சிவபிரசாத்திடம் பேரூராட்சி தலைவர் கீதா புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து வீரபாண்டி போலீசார் உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நராயணி, கணக்கர்கள் பாலசுப்பிரமணி, பழனியப்பன், மேலகாரர் வீரமணி உள்ளிட்ட 5 பேர் மீது கூடுதல் எஸ்.பி., கேல்க்கர் சுப்ரமணிய பால்சந்ரா, எஸ்.ஐ., ராஜசேகர் ஆகியோர் எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us