/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனிமவளம் திருட்டு குவாரி நிர்வாகம் மீது வழக்கு
/
கனிமவளம் திருட்டு குவாரி நிர்வாகம் மீது வழக்கு
ADDED : ஜூன் 11, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே குள்ளப்புரம் அரசு புறம்போக்கு நிலத்தில்,பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் கள ஆய்வு மேற்கொண்டார்.
அந்தப்பகுதியில் கனிமவளம் திருட்டு நடந்துள்ளதை கண்டறிந்தார். இதையடுத்து நில அளவையர் ஜெகஜோதி சர்வே செய்தார்.
இந்நிலையில் குள்ளப்புரம் வி.ஏ.ஓ., ராஜவேல் புகாரில், ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் 'ஜிடிஆர்' குவாரி நிர்வாகம் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.-