sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணையில் தொடர் மழை உயர்ந்து வரும் நீர்மட்டம்

/

பெரியாறு அணையில் தொடர் மழை உயர்ந்து வரும் நீர்மட்டம்

பெரியாறு அணையில் தொடர் மழை உயர்ந்து வரும் நீர்மட்டம்

பெரியாறு அணையில் தொடர் மழை உயர்ந்து வரும் நீர்மட்டம்


ADDED : மே 26, 2025 02:38 AM

Google News

ADDED : மே 26, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 27.6 மி.மீ., தேக்கடியில் 21.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 487 கன அடியாக இருந்த நீர் வரத்து, வினாடிக்கு 584 கன அடியாக அதிகரித்தது. இதன்காரணமாக நீர்மட்டமும் சற்று, உயர்ந்து 114.90 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி குமுளி மலைப்பாதை இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வலியுறுத்தல்


இந்தஅணைக்கு நீர்வரத்துப் பகுதியாக உள்ள சிவகிரி, சாஸ்தா கோயில், சுந்தரமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகமாக இருந்தும் நீர்வரத்து 584 கன அடியை தாண்டவில்லை. கேரள வனத்துறையினர் அணைக்கான நீர்வரத்து பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரை திசை திருப்பியுள்ளதாக பலமுறை தமிழக விவசாயிகள் புகார் கூறியும் இதுவரை ஆய்வை நடத்தவில்லை. இப்போதாவது இப்பகுதிகளை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us