ADDED : ஜன 26, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பிரதமர் மோடி முதல்முறை ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களிடம் பேசினார்.
அவரது பேச்சு தேனி பா.ஜ., கட்சி அலுவலகத்தில் ஒளிபரப்பபட்டது. மாவட்ட தலைவர் பாண்டியன் நிகழ்விற்கு தலைமை வகித்தார். நிகழ்வில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபை தொகுதியை சேர்ந்த முதல்முறை ஓட்டளிக்க உள்ளவர்கள் பங்கேற்றனர். சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் செந்தில்குமார், பாண்டியராஜன், பாலு, லிங்கப்பன் விழா ஒருங்கிணைத்தனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணித்தலைவர் அஜித் செய்திருந்தார்.

