sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

/

இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


ADDED : ஜன 28, 2024 06:22 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி, : பெரியகுளம் சருத்துபட்டியை சேர்ந்தவர் ரவிவர்மன், இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த மினிப்பிரியா 37, என்பவருக்கும் 15 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அவ்வப்போது சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மினிப்பிரியா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மினிப்பிரியா தற்கொலைக்கு காரணமான கணவர் ரவிவர்மன் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இறந்த பெண்ணின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., ராமலிங்கம் மற்றும் போலீசார் சமரசம் செய்தும் உடன்பாடு ஏற்படவில்லை. அங்கிருந்தவந்தவர்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருந்தனர்.






      Dinamalar
      Follow us