ADDED : செப் 15, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : கேரளா, கொச்சி பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபு 49.
இவர் உட்பட நண்பர்கள் ஐந்து பேர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறு அருகே வட்டவடையில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அங்கு ஷிபுவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்தார். மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷிபுவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

