sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்

/

காட்டு பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்

காட்டு பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்

காட்டு பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்


ADDED : மே 12, 2025 04:32 AM

Google News

ADDED : மே 12, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி; போடி மலைக் கிராமங்களில் மிளகு கொடிகளை காட்டு பன்றிகள் வேரோடு அழித்து சேதம் ஏற்படுத்தி வருவதால் விளைந்த மிளகை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை, போடிமெட்டு, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி சாகுபடி ஆகிறது.

இடையில் ஊடு பயிராக வளர்ந்தோங்கிய மரங்களில் மிளகு கொடிகளை வளர்த்து வருகின்றனர். கொடியில் மிளகு நன்கு வளர்ந்து உள்ள நிலையில் காட்டு பன்றிகள்மிளகு கொடிகளை வேரோடு அழித்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விளைந்த மிளகை பறிக்க முடியாத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

50 கி.மீ., துாரத்திற்கு வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில் குழிகள் அமைக்கவும், 25 கி.மீ., துாரத்திற்கு சோலார் மின் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதன்மை வன பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரைசெய்தது. ஆனால் அத்திட்டம் பல ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை செயல் படுத்தாமல் முடங்கியுள்ளது.

பயிர்கள் சேதம் ஏற்படுவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திஉள்ளனர்.






      Dinamalar
      Follow us