sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பள்ளி மாணவர்கள் மோதல் 15 பேருக்கு 'தண்டனை'

/

பள்ளி மாணவர்கள் மோதல் 15 பேருக்கு 'தண்டனை'

பள்ளி மாணவர்கள் மோதல் 15 பேருக்கு 'தண்டனை'

பள்ளி மாணவர்கள் மோதல் 15 பேருக்கு 'தண்டனை'


ADDED : செப் 18, 2025 03:05 AM

Google News

ADDED : செப் 18, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வன்னிகோனேந்தல்:நெல்லை மாவட்டம், வன்னிகோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவன் வாங்கிய தின்பண்டத்தை பிளஸ் 2 மாணவர்கள் பறித்து தாக்கியதால், மோதல் ஏற்பட்டது.

இதில் 9ம் வகுப்பு மாணவனும் தன் நண்பர்களை அழைத்து வந்து சண்டையில் ஈடுபட்டார். ஆசிரியர்கள் தடுக்க முயன்றும் மாணவர்கள் அடங்கவில்லை. பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து, தேவர்குளம் போலீசார் சம்பந்தப்பட்ட 15 மாணவர்களையும் கைது செய்து, சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், ஒழுக்கமாக தலைமுடியை வெட்டி பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளில் உள்ள, ஒரு மதிப்பெண் கேள்வி - பதில்களை எழுதி, நீதி குழுமத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வன்னிகோனேந்தல் அரசு பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கல்விச்சூழலை பாதிப்பதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us