sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கிரிண்டர் செயலி மூலம் ரூ.32 ஆயிரம் பறித்தவர் கைது

/

கிரிண்டர் செயலி மூலம் ரூ.32 ஆயிரம் பறித்தவர் கைது

கிரிண்டர் செயலி மூலம் ரூ.32 ஆயிரம் பறித்தவர் கைது

கிரிண்டர் செயலி மூலம் ரூ.32 ஆயிரம் பறித்தவர் கைது


ADDED : செப் 22, 2025 03:55 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 'கிரிண்டர் ஆப் 'எனப்படும் ஓரினச்சேர்க்கையாளர் செயலி மூலம் பட்டதாரி வாலிபரை அழைத்து மிரட்டி

ரூ .32 ஆயிரத்தை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுாரை சேர்ந்தவர் அருணாச்சலம் 27. இன்ஜினியரிங் பட்டதாரி.

கல்லுாரிகளில் மாணவர்களுக்கு அரசு திட்டத்தின் பயிற்றுநராக உள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் 'கிரிண்டர் ஆப்' எனும் செயலியை இவர் பயன்படுத்தினார். அதில் பழகிய நபர் ஒருவர் அலைபேசியில் பேசி, அருணாச்சலத்தை திருநெல்வேலி தச்சநல்லுாருக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அங்கு சென்றார்.

அங்கிருந்த 4 பேர் கும்பல் அருணாச்சலத்தை தாக்கினர். அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ .32 ஆயிரத்தை ஜீ பே மூலம் பறித்தனர். விசாரித்த தச்சநல்லுார் போலீசார் இதுதொடர்பாக துாத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலை சேர்ந்த ஜெயந்த்குமார் 24, என்பவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி, துாத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் பட்டதாரி வாலிபர்கள், டாக்டர், அரசு உயரதிகாரிகள் என பலரிடமும் இத்தகைய தாக்குதல் மற்றும் பணம் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன.






      Dinamalar
      Follow us