sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்

/

தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்

தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்

தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்


ADDED : ஜன 06, 2024 09:32 PM

Google News

ADDED : ஜன 06, 2024 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி-- - திருச்செந்தூர் இடையே ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதால் நேற்று இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டிச.,17, 18 ல் அதிகனமழை பெய்தது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் குளங்கள் உடைப்பால் திருநெல்வேலி - -திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் தாதன்குளம், நாசரேத் உட்பட 5 இடங்களில் அரிப்புகள் ஏற்பட்டன.

குறிப்பாக தாதன்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அரிப்பால் டிச.17 இரவு ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு நாட்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.

தற்போது அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. நேற்று தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையில் இன்ஜின் வேக சோதனை ஓட்டம் நடந்தது.

உதவி கோட்ட பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் ராமச்சந்திரன், நெல்லை செக்சன் இன்ஜினியர் முருகேசலிங்கம், திருநெல்வேலி நிலைய மேலாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் பயணித்தனர்.

ரயில் இன்ஜின் மட்டும் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.

வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் 20 கி.மீ., வேகத்தில் சென்றது. திருநெல்வேலியில் நேற்று காலை 11:28க்கு கிளம்பிய ரயில் இன்ஜின் மதியம் 12:35க்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் அடைந்தது.

பின்னர் 12:45 க்கு அங்கிருந்து கிளம்பிய ரயில் இன்ஜின் மதியம் 2:10க்கு திருநெல்வேலியை அடைந்தது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு கிளம்பிச் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8:30 மணிக்கு வழக்கம் போல திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது.

இன்று காலை முதல் வழக்கமான ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்களில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us