sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாட்ஸாப் குழுவில் போதை மாத்திரை விற்பனை 5 பேர் கைது

/

வாட்ஸாப் குழுவில் போதை மாத்திரை விற்பனை 5 பேர் கைது

வாட்ஸாப் குழுவில் போதை மாத்திரை விற்பனை 5 பேர் கைது

வாட்ஸாப் குழுவில் போதை மாத்திரை விற்பனை 5 பேர் கைது


ADDED : ஜூலை 24, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாங்காடு:மாங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

இதில், ஈடுபடும் நபர்களை கைது செய்ய, மாங்காடு போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மாங்காடை அடுத்த கோவூர் பகுதியில் நேற்று, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய கோவூரை சேர்ந்த ஈனோக், 28, தாமோதரன் என்கிற அப்பு, 27, சிக்கராயபுரத்தை சேர்ந்த விஷ்ணு, 25, சரத்குமார், 25 ஆகியோரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இவர்கள், ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், 32 என்பவரிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து, விற்பனை செய்து வந்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க வாட்ஸாப் குழு அமைத்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா, 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us