sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருக்குறள் தெரியுமா? உங்களுக்கு தான் பரிசு!

/

திருக்குறள் தெரியுமா? உங்களுக்கு தான் பரிசு!

திருக்குறள் தெரியுமா? உங்களுக்கு தான் பரிசு!

திருக்குறள் தெரியுமா? உங்களுக்கு தான் பரிசு!


ADDED : ஜூலை 24, 2024 01:28 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

வெற்றி பெறுவோருக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் 15,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஆக.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 29595450, 8148870609 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us