/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர் மண்டி துர்நாற்றம் வீசும் வாணியன் குட்டை
/
புதர் மண்டி துர்நாற்றம் வீசும் வாணியன் குட்டை
ADDED : ஜூன் 21, 2024 11:56 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இப்பகுதியிலிருந்து பண்ணுார் செல்லும் நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அருகே வாணியன் குட்டை என்ற குளம் உள்ளது.
இந்த குளத்து நீரை அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ந்து குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து புதர் மண்டி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்லும் அப்பகுதிவாசிகள்கடும் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாணியன் குட்டை என்ற குளத்தை துார்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.