sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்

/

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்


ADDED : ஜூலை 27, 2024 07:10 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, பொதுப் பணித்துறையின் நீர் வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள மழைநீர் கால்வாய், தாமரை ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த மழைநீர் கால்வாயில் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் திறந்து விடப்படுவதால், தாமரை ஏரி மாசு அடைந்து, ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது.

இதையடுத்து புறவழிச்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயை கண்காணிக்கும் பணியில், நீர்வளத்துறையின் உதவிப் பொறியாளர் கண்ணன் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம், சிப்காட் மேம்பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் கால்வாயில், தனியார் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் திறக்கப்பட்டது.

லாரியை பிடிக்க முயன்றபோது, அங்கிருந்து வேகமாக லாரி புறப்பட்டு சென்றது.

லாரியின் பதிவு எண்ணை குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் உதவிப் பொறியாளர் கண்ணன் புகார் அளித்தார்.

வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us