/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு மாவட்ட எல்லையில் செக்போஸ்ட் திறக்கப்படுமா?
/
இரு மாவட்ட எல்லையில் செக்போஸ்ட் திறக்கப்படுமா?
ADDED : ஜூன் 08, 2024 10:57 PM
தக்கோலம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்து அமைந்துள்ளது தக்கோலம். இங்கிருந்து திருவாலங்காடு ரயில் நிலையம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, நகரிகுப்பத்தில் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் என, இரு மாவட்ட எல்லை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் 30க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் வழிப்பறி என சட்டவிரோத சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே இதனை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, இருமாவட்ட எல்லை பகுதியான நகரிகுப்பத்தில், ஓராண்டுக்கு முன் தக்கோலம் போலீசாரால் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை இங்கு காவல் துறையினர் சோதனையில் ஈடுபடவில்லை. இதனால், மக்கள் இரவில் அச்சத்துடன் அப்பகுதி வழியே சென்று வருகின்றனர்.
மேலும் கடந்த ஆறு மாதத்தில் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி நடந்துள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை எஸ்.பி., இந்த செக்போஸ்டில் 24 மணிநேரமும் காவலர்களை நியமித்து, மக்கள் பாதுகாப்பாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.