sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் செயல்படும் 3 போலீஸ் பிரிவுகள்; இடநெருக்கடியால் அவதி

/

பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் செயல்படும் 3 போலீஸ் பிரிவுகள்; இடநெருக்கடியால் அவதி

பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் செயல்படும் 3 போலீஸ் பிரிவுகள்; இடநெருக்கடியால் அவதி

பொன்னேரியில் ஒரே கட்டடத்தில் செயல்படும் 3 போலீஸ் பிரிவுகள்; இடநெருக்கடியால் அவதி


ADDED : செப் 27, 2025 11:02 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரியில் ஒரே கட்டடத்தில், மகளிர் காவல் நிலையம், சட்டம் - ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் புதிதாக துவக்கப்பட்ட உதவி கமிஷனர் அலுவலகம் போன்றவை செயல்படுவதால், கடும் இடநெருக்கடியில் போலீசார் அவதிப்படுகின்றனர்.

பொன்னேரி - செங்கு ன்றம் சாலையில், அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடம் உள்ளது. பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் செயல்பட்டு வந்த சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தின் கட் டடம் சேதமடைந்தது.

அதனால், 2019ல், அந்த காவல் நிலையம், மகளிர் காவல் நிலைய கட்டடத்தின் கீழ்தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. முதல் தளத்தில் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரியில், பொன்னேரி காவல் நிலையம், ஆவடி போலீஸ் கமிஷனரகத்துடன் இணைந்தது.

அதனால், கடந்த ஆகஸ்டில், பொன்னேரி, திருப்பாலைவனம், காட்டூர் காவல் நிலையங்களை உள்ளடக்கி, பொன்னேரி காவல் சரகம் உருவாக்கப்பட்டு உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

இதற்கென தனி அலுவலகம் அமைக்காமல், மகளிர் காவல் நிலைய கட்டடத்திலேயே செயல்படுகிறது.தற்போது, ஒரே கட்டடத்தில் சட்டம் - ஒழுங்கு, மகளிர் காவல் நிலை யம் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகம் போன்றவை செயல் படுகின்றன.

ஒரே கட்டடத்தில் மூன்று பிரிவுகளும் செயல்படும் நிலையில், கடும் இடநெருக்கடியில் போலீசார் அவதிப்படுகின்றனர்.

ஒவ்வொரு பிரிவு ஆவணங்களையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டிய நிலையில், இடநெருக்கடியால் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மக்களின் புகார் மீது, சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தில் நடவடிக்கை இல்லையெனில், உதவி கமிஷனரை பார்க்க நேரிடுகிறது. ஆனா ல், தற்போது ஒரே கட்டடத்தில் இருப்பதால், சட்டம் - ஒழுங்கு போலீசாரை கடந்து சென்று தான், உதவி கமிஷனரை பார்த்து முறையிடுவதி ல் சிக்கல் ஏற்படுகிறது .

ஒவ்வொரு பிரிவும் தனித்தனி கட்டடத்தில் செயல்படும் போது தான், மக்களின் புகார்கள் மீதான நடவடிக்கை சரியாக இருக்கும். காவலர்களும் சிரமமின்றி பணி செய்ய முடியும். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us