sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் காத்திருப்பு

/

ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் காத்திருப்பு

ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் காத்திருப்பு

ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த 30 கிராம மக்கள் காத்திருப்பு


ADDED : ஜூன் 03, 2025 07:53 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியை சுற்றி அரிசந்திராபுரம், தொழுதாவூர், பெரியகளக்காட்டூர், பாகசாலை உட்பட 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், 50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் மருத்துவ தேவைக்கு, 5 - 13 கி.மீ., துாரமுள்ள திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டு 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இதற்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவை மட்டுமே உள்ளது. இதனால், தொலைவில் உள்ள மக்கள் அவசர சிகிச்சைக்கு, நோயாளிகளை அழைத்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. பிரசவம் மற்றும் மற்ற மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், விபத்து மற்றும் அவசர சிகிச்சையின்போது, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும்போது திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், அரக்கோணம், பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து வர காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால், முறையான சிகிச்சை அளிக்க முடியாத சூழலால், நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆய்வு செய்து, 30 கிராமங்களுக்கு மையப்பகுதியான சின்னம்மாபேட்டையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us