sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமழிசையில் பெருகி வரும் பேனர் கலாசாரம்

/

திருமழிசையில் பெருகி வரும் பேனர் கலாசாரம்

திருமழிசையில் பெருகி வரும் பேனர் கலாசாரம்

திருமழிசையில் பெருகி வரும் பேனர் கலாசாரம்


ADDED : ஜன 27, 2024 11:24 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: நெடுஞ்சாலையில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருமழிசை பகுதியில் பேனர் வைப்பத்தில் அரசியல் கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது

இப்பகுதியில் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் மீடியன் பகுதியில் கொடிக்கம்பங்கள் வைப்பது தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், கொடிக்கம்பங்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மேலும் இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள பயணியர் நிழற்குடை, அரசியல் கட்சியினர் விளம்பரமையமாக மாறியுள்ளது.நிகழ்ச்சி முடிந்தும் விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன.

இதேபோல் நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீதும் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.

எனவே, நெடுஞ்சாலையோர விளம்பர பேனர்கள், கொடிக்கம்பங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

l ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பர பேனரால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பொது மக்களுக்கு இடையூறு, விபத்து, உயிரிழப்பு, அசம்பாவிதங்கள் ஏற்படும் விதமாக, பொது இடங்களில் பேனர் தட்டிகள் வைக்கக்கூடாது, மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தன.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, தற்போது பொது இடங்களில், அனைத்து வகையான விளம்பர பேனர்கள், வைக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் முக்கிய வீதிகளின் சாலையோரம் ஏராளமான அரசியல் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. பேருந்து நிலையம், மணிக்கூண்டு, காந்தி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு, விபத்தில் சிக்கும் சூழல் அதிகரித்துள்ளது.

பேரூராட்சி அதிகாரிகள் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.

எனவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து, பேனர்களை அகற்ற, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us