sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விவசாய தொழிலாளர்கள் திருத்தணியில் ஊர்வலம்

/

விவசாய தொழிலாளர்கள் திருத்தணியில் ஊர்வலம்

விவசாய தொழிலாளர்கள் திருத்தணியில் ஊர்வலம்

விவசாய தொழிலாளர்கள் திருத்தணியில் ஊர்வலம்


ADDED : ஜன 27, 2024 01:29 AM

Google News

ADDED : ஜன 27, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து நேற்று திருத்தணி--- பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் இருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் டிராக்டர், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் திருத்தணி நகர் முழுதும் ஊர்வலமாக வந்தனர்.

மாவட்ட துணைத் தலைவர் அப்சல் அகமது தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு தலைவர் பெருமாள், மாவட்ட செயலர் தமிழரசு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் பாபு, ஜெயச்சந்திரன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்ந்து விலை அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us