sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆட்டோ திருடியவர் கைது மூவருக்கு வலை

/

ஆட்டோ திருடியவர் கைது மூவருக்கு வலை

ஆட்டோ திருடியவர் கைது மூவருக்கு வலை

ஆட்டோ திருடியவர் கைது மூவருக்கு வலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:கிருஷ்ணாபுரம் கண்டிகையைச் சேர்ந்தவர் துரைசாமி, 45. சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோ மாயமானது.

பனப்பாக்கம் கிராமம் அருகே கூட்டமாக மக்கள் இருந்ததை கண்டு அங்கு சென்றார். அப்போது, தன் ஆட்டோ இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து விசாரித்ததில், மர்ம நபர்கள் நான்கு பேர் ஆட்டோவில் வந்து காரை திருட முயன்றபோது, துரைசாமிக்கு சொந்தமான ஆட்டோவை திருடிச் சென்றது தெரிந்தது.

தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீசார், ஒருவரை கைது செய்தனர். மற்ற மூன்று பேர் தப்பியோடினர். விசாரணையில், பிடிபட்ட நபர், சென்னை அப்பர் நகர் கார்த்திக், 22, என தெரிந்தது.

பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar