sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஐந்தாவது முறையாக மதுக்கடை முற்றுகை

/

ஐந்தாவது முறையாக மதுக்கடை முற்றுகை

ஐந்தாவது முறையாக மதுக்கடை முற்றுகை

ஐந்தாவது முறையாக மதுக்கடை முற்றுகை


ADDED : பிப் 01, 2024 09:56 PM

Google News

ADDED : பிப் 01, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. தேர்வழி கிராம மக்களுக்கு பல வகையில் இடையூறாக இயங்கி வரும் அந்த மது கடையை மூட வேண்டும் என, பல மாத காலமாக கிராம பெண்கள் போராடி வருகின்றனர்.

கடையை மூட வலியுறுத்தி, நான்கு முறை முற்றுகையிட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இறுதியாக, ஜனவரி மாதம், 31ம் தேதிக்குள் கடை இடம் மாற்றம் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினத்துடன் கெடு முடிந்த நிலையில், தேர்வழி கிராம பெண்கள் சிலர், நேற்று கடையை ஐந்தாவது முறையாக முற்றுகையிட சென்றனர். இதனால் ஏராளமான போலீசார் மதுக்கடை முன் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜெயகுமார் பெண்களிடம் சமாதானம் பேசினார். கடையை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கடை இடம் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us