/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு
/
வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு
வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு
வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 15, 2025 08:04 PM
திருவாலங்காடு:முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், நடப்பு நிதியாண்டில், 25,000 வீடுகள் கட்டுவதற்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளில் 90க்கும் மேற்பட்ட வீடுகள் பயன்பெற உள்ளன.
இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறியதாவது:
கடந்த 2001 மார்ச் 31ம் தேதிக்கு முன், அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் வீடு பழுதடைந்திருந்தால் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 210 சதுர அடியில் வீடு கட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பட்டா, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், இரண்டு போட்டோ ஆகியவற்றுடன் ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில், அரசு திட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளும், மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே, அவர்களும் விண்ணப்பிக்கலாம் என, விதியை தளர்த்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.