sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை

/

புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை

புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை

புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை


ADDED : செப் 28, 2025 01:36 AM

Google News

ADDED : செப் 28, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி பகுதியில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, திருத்தணி, விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

திருத்தணி அடுத்த பொன்பாடி கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், நேற்று காலை 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு உற்சவர் சி றப்பு அலங்காரத்தில் டிராக்டரில் வீதியுலா வந்தார்.

அதே போல், திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

இரவு 8:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை பிராமண தெருவில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று காலை கிருஷ்ணர் படத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.

இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

அதேபோல், ஆர்.கே.பேட்டை அருகே நாராயணவனத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us