/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை
/
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் விமரிசை
ADDED : செப் 28, 2025 01:36 AM

திருத்தணி:திருத்தணி பகுதியில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, திருத்தணி, விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
திருத்தணி அடுத்த பொன்பாடி கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், நேற்று காலை 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு உற்சவர் சி றப்பு அலங்காரத்தில் டிராக்டரில் வீதியுலா வந்தார்.
அதே போல், திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை பிராமண தெருவில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று காலை கிருஷ்ணர் படத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அதேபோல், ஆர்.கே.பேட்டை அருகே நாராயணவனத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

