/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா விற்ற இருவருக்கு குண்டாஸ்
/
கஞ்சா விற்ற இருவருக்கு குண்டாஸ்
ADDED : ஜன 27, 2024 01:32 AM

அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் கிரிபில்ஸ்பேட்டையை சேர்ந்த அசோக்குமார், 29.
அரக்கோணம் அடுத்த அரிகில்பாடி கிராமம் கம்ம கண்டிகை பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வரன், 19. ஆகிய இருவரையும் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. கிரன் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அசோக்குமார் மற்றும் கோட்டீஸ்வரன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

