sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மழைநீர் வடிகால்வாய் சேதம் நெடுஞ்சாலை துறை பாராமுகம்

/

மழைநீர் வடிகால்வாய் சேதம் நெடுஞ்சாலை துறை பாராமுகம்

மழைநீர் வடிகால்வாய் சேதம் நெடுஞ்சாலை துறை பாராமுகம்

மழைநீர் வடிகால்வாய் சேதம் நெடுஞ்சாலை துறை பாராமுகம்


ADDED : செப் 16, 2025 12:53 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி;திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்காமல் நெடுஞ்சாலை துறை யினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

திருத்தணி நகராட்சியில், திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இச்சாலையோரம், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால்வாய் அமைத்துள்ளனர்.

மாநில நெடுஞ்சாலையில் இருந்து சன்னிதி தெரு மற்றும் மேட்டுத் தெரு ஆகிய இடங்களுக்கு வாகனங்கள் திரும்பும் இடத்தில் உள்ள மழைநீர் கால்வாய் சேதடைந்துள்ளது.

பல மாதங்களான நிலையில், இதுவரை நெடுஞ்சாலை துறையினர் கால்வாயை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க, திருவள்ளூர் கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us