sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்

/

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்


ADDED : பிப் 29, 2024 09:42 PM

Google News

ADDED : பிப் 29, 2024 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே உள்ள குறுவாயல் கிராமத்தில், 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை.

இப்பகுதியில் சில நாட்களாக தனியார் சார்பில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி அப்பகுதி வாசிகள், தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெரியபாளையம் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திருவள்ளூர் ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, கடந்த 13ம் தேதி திருவள்ளூர் ஆ.டி.ஓ., அலுலகத்தில் பேச்சு நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், குறுவாயல் கிராமத்தில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியினர் மீண்டும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us