ADDED : ஜூன் 21, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,:திருத்தணி நகரைச் சேர்ந்தவர் மனோகர், 59. இவர் வீட்டருகே, நேற்று காலை நான்கு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மனோகர், சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, மனோகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.