/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயர்கல்வி ஆலோசனை வழங்க கண்காணிப்பு அறை துவக்கம்
/
உயர்கல்வி ஆலோசனை வழங்க கண்காணிப்பு அறை துவக்கம்
ADDED : ஜூன் 06, 2025 11:41 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தில், நடப்பு 2025 - 26ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பயின்ற அனைத்து மாணவர் மற்றும் கடந்தாண்டு மேற்படிப்பு தொடராத மாணவர் ஆகியோருக்கு உயர் கல்வி பயில்வதற்கு ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் அளிப்பதற்காக, மாவட்ட கண்காணிப்பு அறை, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு அறையை, 93444 10803, 75500 57547 என்ற தொலைபேசி எண் வாயிலாக, மாணவர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த ஆலோசனையை பெறலாம்.
மாணவர்களின் கல்விக்காக நன்கொடை அளிக்க விருப்பமுள்ளோர் 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊர் பள்ளி' NSNOP Portal இணையம் வழியாக நிதி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும். வரும் அக்டோபர் வரை இச்சிறப்பு குறைதீர் கூட்டம் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.