sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிருஷ்ணசமுத்திரத்தில் 17 மணி நேரம் மின்சப்ளை கட் : மக்கள் கடும் அவதி

/

கிருஷ்ணசமுத்திரத்தில் 17 மணி நேரம் மின்சப்ளை கட் : மக்கள் கடும் அவதி

கிருஷ்ணசமுத்திரத்தில் 17 மணி நேரம் மின்சப்ளை கட் : மக்கள் கடும் அவதி

கிருஷ்ணசமுத்திரத்தில் 17 மணி நேரம் மின்சப்ளை கட் : மக்கள் கடும் அவதி


ADDED : ஜூன் 09, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,

திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கும் மற்றும் விவசாய மின்மோட்டார்களுக்கும், இரண்டு, மின்மாற்றிகள் மூலம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,மேட்டுத் தெரு, நடுத் தெரு மற்றும் பள்ளத் தெரு ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு திடீரென மின்சப்ளை நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று மதியம், 12:00 மணி வரை, அதாவது 17 மணி நேரம் மின்சப்ளை வழங்காததால் இரவு முழுதும் மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றி தெருக் குழாய்களில் குடிநீர் வினிநியோகம் செய்யவில்லை.

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி விவசாயிகள், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்ஒயர்கள் மீது மரக்கிளைகள் விழுவதால் மின்மாற்றியில் பழுது ஆகிறது. நேற்று காலையில் மின்ஒயர்கள் மீது படும் மரக்கிளைகள் அகற்றிய பின் மதியம், மின்சப்ளை வழங்க பட்டது' என்றார்.






      Dinamalar
      Follow us