ADDED : ஜன 09, 2024 09:35 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகேயுள்ள சுருட்டப்பள்ளி, சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, 4:30 மணிக்கு பிரதோஷ விழா நடந்தது.
மூலவர் வால்மிகீஸ்வரர், நந்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
மலர் மாலைகள், அருகம்புல் ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து அருள்பாலித்தார்.
ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர், தேவந்தவாக்கம். திரிபுர சுந்தரி சமேத தேவநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் இந்த ஆண்டின் முதல் பிரதோஷ விழா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

