sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை நவீன வசதியுடன் புதுப்பிக்க கோரிக்கை

/

நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை நவீன வசதியுடன் புதுப்பிக்க கோரிக்கை

நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை நவீன வசதியுடன் புதுப்பிக்க கோரிக்கை

நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை நவீன வசதியுடன் புதுப்பிக்க கோரிக்கை


ADDED : ஜூன் 26, 2025 09:39 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இதில், 38 ஆண்டுகள் பழமையான அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை உள்ளன.

தனித்தனியாக இரு அறைகள் கொண்ட ஆய்வு மாளிகை பாழடைந்து கிடக்கிறது. ஒரு அறை கிடங்காகவும், மறு அறை அலுவலக பயன்பாட்டிற்காகவும் உள்ளன.

பொதுவாக ஆய்வு மாளிகை என்பது, அரசு துறை சார்ந்த அலுவலர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுக்கவும், வசிக்கவும் பயன்படுத்தப்படும். ஆனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆய்வு மாளிகை பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

சட்டசபை தொகுதியின் தலைமையிடம் மற்றும் தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில், கூடுதல் அறைகள் கொண்ட புதிய ஆய்வு மாளிகை நிறுவ வேண்டும்.

மேலும், பாழடைந்த நிலையில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தையும் இடித்து, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us