நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 15ல் தொடங்கி. பிப்.14 வரை நடைபெற உள்ளது.
கடந்த நான்கு நாட்களாக முதல் திருவள்ளூர் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
வரும் 31ல் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும், பிப். 12ல் ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜி.மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

