/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி
/
சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி
ADDED : பிப் 01, 2024 09:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா - விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி திருவண்ணாமலை மாவட்டம் அத்தியாந்தல் சிறுதானிய ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது.
அத்தியாந்தல் ஆராய்ச்சி நிலைய தலைமை பேராசிரியர் வைத்தியலிங்கம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் திருவாலங்காடு வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

