sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாயமாகும் சுகாதார வளாகம் அரசு பணம் வீணடிப்பு

/

மாயமாகும் சுகாதார வளாகம் அரசு பணம் வீணடிப்பு

மாயமாகும் சுகாதார வளாகம் அரசு பணம் வீணடிப்பு

மாயமாகும் சுகாதார வளாகம் அரசு பணம் வீணடிப்பு


ADDED : ஜூன் 29, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:பூனிமாங்காடு காலனியில் பராமரிப்பின்றி மகளிர் சுகாதார வளாகம் உள்ளதால், அரசு பணம் வீணாகிறது.

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பெண்களின் நலன் கருதி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இப்பகுதி பெண்கள் மகளிர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதி பெண்கள் சுகாதாரம் செல்வதை தவிர்த்து வந்தனர்.

தற்போது, சுகாதார வளாகத்தை சுற்றி செடிகள் வளர்ந்து மாயமாகி வருகிறது. ஆண்டுதோறும் ஊராட்சி நிர்வாகம், மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு பணிக்கு என, கணிசமான தொகையை எடுத்துக் கொள்கிறது. இதனால், அரசு பணம் வீணாகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, செடிகள் வளர்ந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us