sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

12 ஆண்டாக பஸ் வசதியில்லாததால் விடியங்காடு மக்கள் கடும் அவஸ்தை

/

12 ஆண்டாக பஸ் வசதியில்லாததால் விடியங்காடு மக்கள் கடும் அவஸ்தை

12 ஆண்டாக பஸ் வசதியில்லாததால் விடியங்காடு மக்கள் கடும் அவஸ்தை

12 ஆண்டாக பஸ் வசதியில்லாததால் விடியங்காடு மக்கள் கடும் அவஸ்தை


ADDED : ஜூன் 14, 2025 08:58 PM

Google News

ADDED : ஜூன் 14, 2025 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக வள்ளிமலை செல்லும் மார்க்கத்தில் விடியங்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

விடியங்காடு மற்றும் விடியங்காடு ஊராட்சிக்குட்பட்ட புதுார் மேடு, வெங்கடாபுரம், தாமரைகுளம், வேணுகோபாலபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தோர், அத்தியாவசிய பணிகளுக்காக தினமும் ஆர்.கே.பேட்டை மற்றும் சோளிங்கருக்கு பயணிக்கின்றனர்.

ஆனால், இந்த மார்க்கத்தில் சோளிங்கரில் இருந்து வள்ளிமலைக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண்: 50 என்ற ஒரேயொரு அரசு பேருந்தும், 12 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என, பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக நாகபூண்டி வரை இயக்கப்படும் தடம் எண்: டி 52 என்ற அரசு பேருந்தை, 6 கி.மீ., துாரம் நீட்டித்து, விடியங்காடு வரை இயக்க வேண்டும் அல்லது இந்த மார்க்கத்தில் சோளிங்கர் வழியாக ஆர்.கே.பேட்டை வரை புதிய பேருந்து இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai