sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாதியில் நின்ற அரசு பேருந்து தள்ளி 'ஸ்டார்ட்' செய்த அவலம்

/

பாதியில் நின்ற அரசு பேருந்து தள்ளி 'ஸ்டார்ட்' செய்த அவலம்

பாதியில் நின்ற அரசு பேருந்து தள்ளி 'ஸ்டார்ட்' செய்த அவலம்

பாதியில் நின்ற அரசு பேருந்து தள்ளி 'ஸ்டார்ட்' செய்த அவலம்


ADDED : செப் 13, 2025 01:34 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, கனகம்மாசத்திரம் பஜாரில் பழுதாகி நின்றதால், பயணியர் பேருந்தை தள்ளிச் சென்றனர்.

திருவள்ளூரில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பழுதாகியும், டயர் பஞ்சராகியும் நடுவழியில் நிற்பது அடிக்கடி நடப்பதால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நேற்று காலை 10:30 மணிக்கு திருத்தணியில் இருந்து திருவள்ளூர் சென்ற தடம் எண்: 97 அரசு பேருந்து கனகம்மாசத்திரம் பஜாரில் பழுதாகி நின்றது. பேருந்தில் 40 பயணியர் பயணம் செய்தனர்.

உடனடியாக, பயணியர் இறங்கி பேருந்தை தள்ளினர்.

பின், சிறிது துாரம் சென்றதும் பேருந்து ஸ்டார்ட் ஆனது. எனவே, அரசு பேருந்துகளை முறையாக பழுது நீக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us