/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறிய அவலம்
/
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறிய அவலம்
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறிய அவலம்
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறிய அவலம்
ADDED : செப் 14, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயலாநல்லூர்:வயலுார்நல்லுார் பகுதியில் மதுக்கூடமாக மாறிய பயணியர் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமழிசை அருகே வயலாநல்லுார் ஊராட்சியில் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிழற்குடைகள் போதிய பராமரிப்பில்லாததால், செடிகள் வளர்ந்து, போஸ்டர் ஒட்டும் இடமாகவும், மதுக்கூடமாகவும் மாறியுள்ளன. இதனால். இப்பகுதி மக்கள் நிழற்குடைகளை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பயணியர் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.