/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்- திருநின்றவூர் நெடுஞ்சாலை இணைப்பு சாலை பணி விறுவிறு
/
திருவள்ளூர்- திருநின்றவூர் நெடுஞ்சாலை இணைப்பு சாலை பணி விறுவிறு
திருவள்ளூர்- திருநின்றவூர் நெடுஞ்சாலை இணைப்பு சாலை பணி விறுவிறு
திருவள்ளூர்- திருநின்றவூர் நெடுஞ்சாலை இணைப்பு சாலை பணி விறுவிறு
ADDED : ஜூன் 13, 2025 02:30 AM

திருவள்ளூர்:திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை அமைக்கப்பட்டு வரும் இணைப்பு சாலை பணி விரைவாக நடந்து வருகிறது.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து-ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., துாரம் ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, கடந்த, 2011ம் ஆண்டு துவங்கியது.
அப்போது, சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார்-ரேணிகுண்டா வரையும், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர்-புத்துார் வரை, இருவழி சாலையாக மாற்றப்பட்டது.
திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர் வழியாக வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் தனியார் ஸ்டீல் கம்பெனி அருகில், இணைக்கும் பணி, கடந்த ஏழு ஆண்டுகளாக முடங்கியது.
இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் நுழைந்து செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர்-திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த, 2023ம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ள வழியில், ஊத்துக்கோட்டை சாலை- ஐ.சி.எம்.ஆர்., அருகில் மற்றும் தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உள்பட, திருநின்றவூர் வரை ஏழு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து ஈக்காடு சாலை வரை, 3 கி.மீ., துாரம் வரை தார்ச்சாலை மற்றும் இரண்டு இடங்களில் மேம்பாலம் பணி அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, தார்ச்சாலை, சாலையோர இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. சாலையோரம் மண் சரிவை தடுக்கும் வகையில், நவீன முறையில் 'கான்கிரீட்' அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.