sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் நண்பனை கொன்று வாலிபர் தற்கொலை

/

ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் நண்பனை கொன்று வாலிபர் தற்கொலை

ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் நண்பனை கொன்று வாலிபர் தற்கொலை

ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் நண்பனை கொன்று வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 10, 2024 09:58 PM

Google News

ADDED : ஜன 10, 2024 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொளம்பூர்:அமைந்தகரை எம்.எம்., காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ், 26; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர், அம்பத்துார் கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன், 24. இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிந்தார்.

இருவரும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த பெற்றோர், இருவரையும் கண்டித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இருவரும் பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில், அமைந்தகரை மற்றும் அம்பத்துார் காவல் நிலையங்களில், இருவரின் பெற்றோரும் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், 9ம் தேதி இரவு வாஞ்சிநாதன் தன் அக்காவின் மொபைல் போனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில், லோகேஷை கொலை செய்து, நானும் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வாஞ்சி நாதனின் மொபைல் போன் டவரை போலீசார் ஆய்வு செய்ததில், முகப்பேர் மேற்கு பன்னீர் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்ற நொளம்பூர் போலீசார், விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, லோகேஷ் 'டிராக் பேன்ட் லேசால்' கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையிலும், வாஞ்சிநாதன் மின் விசிறியில், போர்வையால் துாக்கிட்டும் தற்கொலை செய்து காணப்பட்டார்.

இதையடுத்து, இருவரது உடலையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், லோகேஷிற்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அவர் வாஞ்சிநாதனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால், தனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில், லோகேஷை கொலை செய்து, வாஞ்சிநாதன் தற்கொலை செய்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us