/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை மாணவ, மாணவியர் அவதி
/
பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை மாணவ, மாணவியர் அவதி
பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை மாணவ, மாணவியர் அவதி
பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை மாணவ, மாணவியர் அவதி
ADDED : ஜூன் 13, 2025 02:41 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இருளஞ்சேரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள பயணியர் நிழற்குடையை, மூன்று ஊராட்சிக்கு செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2013 --- 14ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், இந்த நிழற்குடை சீரமைக்கப்பட்டது. அதன்பின், 11 ஆண்டுகளாக நிழற்குடை எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாததால் மிகவும் சேதமடைந்து, போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது.
இந்த நிழற்குடை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் மற்றும் மாணவ- - மாணவியர் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து, நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.