sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கால்நடை மருந்தகம் தரம் உயர்த்த வலியுறுத்தல்

/

திருத்தணி கால்நடை மருந்தகம் தரம் உயர்த்த வலியுறுத்தல்

திருத்தணி கால்நடை மருந்தகம் தரம் உயர்த்த வலியுறுத்தல்

திருத்தணி கால்நடை மருந்தகம் தரம் உயர்த்த வலியுறுத்தல்


ADDED : ஜூன் 19, 2025 07:04 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 07:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகங்கள், 6 கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் திருத்தணி கால்நடை மருந்தகத்திற்கு தினசரி, 100 கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வருகின்றனர். அவற்றிக்கு சிகிச்சை மற்றும் செயற்கை கருவூட்டல் மருத்துவர் அளிக்கின்றனர்.

இதுதவிர தினமும், 15-25 செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது

செல்லப்பிராணிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வசதியில்லாததால் சென்னை வேப்பேரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

திருத்தணி மருந்தகத்திற்கு, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை சிகிச்சைக்காக ஓட்டி வருகின்றனர்.

திருத்தணி கால்நடை மருந்தகத்தை பண்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தினால், செல்லப் பிராணிகளுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் மருந்துகள் அதிகளவில் ஒதுக்கீடு கிடைக்கும்.

கால்நடைகளுக்கு அனைத்து சிகிச்சைகளும் இங்கே வழங்கப்படும். மேலும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கியிருந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். எனவே திருத்தணி கால்நடை மருந்தகத்தை பண்முக மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us