sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை துவக்க வலியுறுத்தல்

/

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை துவக்க வலியுறுத்தல்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை துவக்க வலியுறுத்தல்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை துவக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 04, 2025 10:22 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவத்தை, அக்டோபர் மாதமே துவக்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடில் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த ஆலைக்கு, மாவட்டம் முழுதிலும் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், 8,000 ஏக்கர் பரப்பளவில் பதிவு செய்து, கரும்பை அனுப்பி வைக்கின்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அரவை பருவம் துவங்கும். கடந்தாண்டு 20 கோடி கிலோ கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆண்டு, ஒரு மாதத்திற்கு முன்னதாக அரவை பருவத்தை, ஆலை நிர்வாகம் துவக்க வேண்டும் என, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

முன்கூட்டியே அரவை பருவம் துவக்கப்படுவதால், அரவை நிறைவடையும் சமயத்தில், கரும்பு பயிர் முற்றி, எடை குறையும் வாய்ப்பு தவிர்க்கப்படும்.

மேலும், விவசாயிகளும் குறிப்பிட்ட பருவத்திலேயே கரும்பை அறுவடை செய்ய இயலும் என, எதிர்பார்க்கின்றனர்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கை குறித்து, தமிழக அரசுக்கு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில், முன்கூட்டியே அரவை பருவத்தை துவக்க பரிசீலனை செய்வதாக, கலெக்டர் உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us